Tamil Siththarkal APP
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை। ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே। ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும்। அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்।
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும்। இதைத் தான் திருமூலரும் ...
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே! "
என்கிறார்।
இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்।
அகத்தியரும் ..
செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா மனமது;
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை। அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே। மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்।
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்।
தமிழ்ச் சித்தர்கள்
1. திருமூலர்
2. இராமதேவ சித்தர்
3. அகத்தியர்
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போகர்
9. மச்சமுனி
10 கொங்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி சித்தர்
15. சட்டைமுனி
16. சுந்தரானந்தர்
17. குதம்பைச்சித்தர்
18. கோரக்கர்
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும்। ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்। ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்।
எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம்। சீரும் சிறப்புமாய் வாழ்வோம்।